டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 5 மற்றும் 10 கிராம் தங்க நாணயங்களையும் 20 கிராம் எடையுள்ள தங்க கட்டியும் வெளியிட்டார். பின்னர் பேசிய அவர் "நம்நாட்டில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் சுமார் 20 ஆயிரம் டன் தங்கத்தை வெளிக் கொண்டு வர இந்த திட்டங்கள் உதவும் என்றும் ஆண்கள் பெயரிலேயே பெரும்பாலான சொத்துக்கள் உள்ள நிலையில், பெண்களின் ஒரே சொத்தாக தங்கம் இருந்து வருவதாகவும் வங்கியில் தங்கத்தை மக்கள் டெபாசிட் செய்ய முன்வர வேண்டும்" எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கம் அடிப்படையிலான 3 புதிய முதலீட்டுத் திட்டங்களால் 20 ஆயிரம் டன் தங்கம் வெளிக்கொண்டு வர இந்த திட்டங்கள் உதவும் என்றும் வங்கிகளில் 5 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை பணம் பரிவர்தனை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.