இந்தியாவிற்கு ஆதரவு அளிக்க மெக்சிகோ உறுதி!

வெள்ளி, 10 ஜூன் 2016 (10:29 IST)
அணுசக்தி விநியோக நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற மெக்சிகோ ஆதரவு அளிக்கும் என அந் நாட்டு ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார்.
 

 
5 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தனது வெளிநாட்டு பயணத்தின் இறுதி கட்டமாக வியாழன் காலை மெக்சிகோ சென்றடைந்தார். அங்கு அந்நாட்டு ஜனாதிபதி என்ரிக் பினா நீட்டோவை சந்தித்து பேசினார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, “அப்போது பேசிய மெக்சிகோ ஜனாதிபதி, அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியா இடம்பெற மெக்சிகோவும் ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.தொடர்ந்து மோடி பேசுகையில், இந்தியாவை ஆதரித்த முதல் லத்தீன் அமெரிக்க நாடு மெக்சிகோ தான்.
 
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் 3 முறை சந்தித் துள்ளோம். எங்களிடையே உண்மையான நட்பு ஏற்பட் டுள்ளது. விண்வெளி, அறி வியல், தொழில்நுட்ப துறைகளில் இந்தியா-மெக்சிகோ உறவு மேலும் வலுப்படுத்தப் படும்.
 
சூரிய சக்தி, உயிரி தொழில்நுட்பம், வேளாண்துறை, பேரிடர் முன்னெச்சரிக்கைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம் படுத்திக் கொள்ள இந்தியா- மெக்சிகோ இடையே ஒப்புதல் அளித்துள்ளோம்” என்றார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்