தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், இரு சக்கர வாகன ஓட்டிகள் நிச்சயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்ற சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஆனால், அதை யாரும் சரியாக பின்பற்றவில்லை. இது சம்பந்தமாக ஏராளமான வழக்குகள் அங்கு தினமும் பதிவு செய்யப்படுகின்றன.
இதனால், ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். அதன்படி, ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் அமுல்படுத்தப்பட்டது.