தேர்தலைப் புறக்கணித்த 5 கிராம மக்கள்!

வியாழன், 17 ஏப்ரல் 2014 (11:30 IST)
உத்தரபிரதேச மாநிலம் பிலிபெட் தொகுதியில் இன்று பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 
 
தேர்தலை 5 கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர். தங்களது பகுதியில் எந்த  ஒரு வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளவில்லை என்று கூறி அவர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். 
 
தொகுதியின் பைஜுல்லாகாஞ், பாத்ரா, கேசாவ்பூர், பவுதா காஸ் மற்றும் காஸ் சராய் ஆகிய கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் வருண்காந்தி எம்.பி.யாக இருந்தார். இப்போது அவர் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்