அதன்பின், கருப்புப் பணத்தை தங்கம் மற்றும் நிலத்தில் முதலீடு செய்திருப்பவர்கள் மற்றும் வங்கி லாக்கர்களில் குறிப்பிட்ட அள்வுக்கு மேல் தங்கம் வைத்திருப்பவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை பாயும் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் கையில் ரூ.20 லட்சத்திற்கு மேல் வைத்திருக்கக் கூடாது. அதற்கு மேல், வைத்திருந்தால் அது சட்ட விரோத பணமாக கருதப்படும் என அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், காகித ரூபாய் நோட்டுகளை முற்றிலும் ஒழித்து விட்டு, பிளாஸ்டிக் கரன்சிகளுக்கு மாறும் திட்டத்தையும் மோடி கையில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.