பிரபல இசைக் கலைஞர் டி.கே. பட்டம்மாள் புகைப்படத்துடன் அஞ்சல் தலை

செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (12:45 IST)
பிரபல இசைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை எட்டு அஞ்சல் தலைகளை 03.09.2014 அன்று வெளியிட உள்ளது. 
 
இதையொட்டி பிரபல கர்நாடகப் பாடகரான டி.கே. பட்டம்மாள், பிரபல இந்துஸ்தானி பாடகரான அலி அக்பர் கான், பிரபல இந்துஸ்தானி பாடகரான பீம்சென் ஜோஷி, பிரபல கர்நாடக பாடகரான கங்குபாய் ஹங்வால், பிரபல இந்துஸ்தானி பாடகரான குமார் கபர்வா, பிரபல இந்துஸ்தானி பாடகரான மல்லிகா அர்ஜூன் மான்சூர், பிரபல சித்தார் வித்வான் ரவி சங்கர் மற்றும் இந்திய பாரம்பரிய இசைக் கலைஞரான விலையத்கான் ஆகியோரின் புகைப்பட அஞ்சல் தலைகளை இந்திய அஞ்சல் துறை வெளியிட உள்ளது. 
 
இந்திய இசைக் கலைஞர்களுக்கான சிறப்பு அஞ்சல் தலையைக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, புது தில்லியில் 03.09.2014 அன்று வெளியிடுவார்.
 
சென்னையில் உள்ள திருமதி சிவகாமி பெத்தாச்சி அரங்கத்தில் தமிழ்நாடு சிறப்பு வட்டார தலைமை அஞ்சல் அலுவலர் டி. மூர்த்தி, இசை மேதைகளின் அஞ்சல் தலைகளை 03.09.2014 அன்று வெளியிடுவார். அப்போது சிறப்பு அஞ்சல் தலை சேகரிப்பு விற்பனை மையம் அமைக்கப்படும். வெளியீட்டு நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் சிவா இசைக் கச்சேரி நடைபெறும். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்