நிலம் விற்று ரூ. 55 லட்சம் வைத்திருந்த பாட்டி தற்கொலை!

வெள்ளி, 11 நவம்பர் 2016 (16:25 IST)
ரூ. 55 லட்சம் வைத்திருந்த தெலுங்கானாவைச் சேர்ந்த பாட்டி ஒருவர் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

தெலங்கானா மாநிலம், மெகபூபாபாத் மாவட்டத்திற்கு உட்பட்ட சனிகாபூரைச் சேர்ந்தவர் வினோதா. 55 வயதான வினோதா, தனது 12 ஏக்கர் நிலத்தை விற்று 55 லட்சம் ரூபாய் பணத்தை கையில் வைத்திருந்து உள்ளார்.

இந்த பணம் அனைத்தும் 500 ரூபாய், 1000 ரூபாய் பண்டல்களாக இருந்துள்ளது. இந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யலாம் என்று வினோதாவும், அவரது மனைவியும் திட்டமிட்டிருந்தனர். ஆனால், பிரதமர் நரேந்திரமோடி திடீரென 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததால் வினோதா அதிர்ச்சி அடைந்தார்.

தங்களிடம் உள்ள பணத்தை மாற்ற முடியாதோ, இந்த பணம் முழுவதும் பறிபோய் விடுமோ என்ற குழப்பத்திற்கு உள்ளான வினோதா வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்