வங்கியின் இணையதள பக்கத்தை முடக்கிய பின், 'பைசல் 1337; நாங்கள் பாகிஸ்தான் சைபர் தாக்குதல் குழு; உங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்; www.facebook.com/Pakistan1337. பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கூறப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் நடந்த 24 மணிநேரத்திற்குள் ரிசர்வ் வங்கி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. கனரா வங்கியும் உடனடியாக சைபர் கிரைம் பிரிவில் எப்.ஐ.ஆர் பதிவு செய்து வழக்கமான சர்வரை தவிர்த்து 'ஸ்டேன்பை' சர்வருக்கு பரிவர்த்தனைகளை மாற்றியது. இதனால் பணப் பரிவர்த்தனைகளில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை.