போலீஸ் இணையதளத்தில் "பட்டொளி வீசி பறந்த பாகிஸ்தான் கொடி"

திங்கள், 13 ஜூன் 2016 (11:11 IST)
கர்நாடகா போலீஸ் இணையதளம் தீடீர் முடக்கப்பட்டதோடு, அதில் பாகிஸ்தான் கொடியை பறக்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
இந்தியாவில் உள்ள ஒவ்வாரு மாநில காவல்துறைக்கும் தனித்தனியாக இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணைய தளத்தில் காவல்துறை அதிகாரிகள் பதவிகள், தொலைபேசி எண்கள், செயல்பாடுகள், தேடப்படும் குற்றவாளிகள் குறித்த தகவல்கள் போன்ற பல்வேறு முக்கியத் தகவல்கள் இடம் பெறும்.
 
இந்த நிலையில், அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான  http://www.ksp.gov.in திடீரென முடக்கப்பட்டது. இணையதளத்தின் முன்பக்கம் எல்லாம் அழிக்கப்பட்டதோடு, பாகிஸ்தான் கொடியை அப்டேட் செய்து, பறக்கவிட்டுள்ளனர். அத்துடன், உங்கள் பாதுகாப்புக்கு இது அவமானம் என்று எழுதப்பட்டு இருந்தது.
 
இதனையடுத்து, உடனடி விசாரணையில் கர்நாடகா கிரைம் போலீசார் விசாரணையில் குதித்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்