அந்த வகையில், மும்பையின் சண்முகானந்தா ஹாலில் வெள்ளிக் கிழமையன்று, குலாம் அலியின் கஜல் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மும்பை ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர் பார்த்திருந்தனர்.
இந்நிலையில் சிவசேனா, வழக்கம்போல பாகிஸ்தான் எதிர்ப்பு - இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்தது. பாகிஸ்தான் பாடகரான குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை, மும்பையில் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது.
இது குலாம் அலியின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால், குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை, அதன் ஏற்பாட்டாளர்கள் தற்போது ரத்து செய்துள்ளனர்.