இந்நிலையில் என்எஸ்ஜி குழுவில் இணைய இந்தியா நீண்ட காலமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கு அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திட வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. அது, இந்தியாவின் நீண்டகால கொள்கை முடிவாகும்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணுசக்தி குழுமத்தில் சேர்வது தொடர்பாக பாகிஸ்தானின் மூத்த வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த போது, "அணுசக்தி குழுமத்தில் சேர அடிப்படை சார்ந்த அணுகுமுறையில் பாகிஸ்தான் பல நாடுகளிடம் படிப்படியாக ஆதரவை திரட்டி வருகிறது" என கூறினார்.