இருநாடுகளுக்கும் இடையே கடந்த காலத்தில் நடந்த மோசமான நிலைமைகளில் இருந்து மாறுபட்டு இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்புடன் பேச்சு நடத்துவதற்கு பாகிஸ்தான் தலைவர்கள் தயாராக உள்ளனர். விரைவில் விரிவான பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இரு ஜனநாயக நாடுகளும் பகைமையை மறக்க வேண்டும். இருதரப்பில் எடுக்கப்படும் தவறான எந்த முடிவையும் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதுதான் கடந்த கால வரலாறாக உள்ளது.
பாகிஸ்தானில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசாங்கமானது அமைதிக்குதான் அதிமுக்கியத்துவம் அளித்துள்ளது. எங்களது வெளிநாட்டு கொள்கையில் நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது அமைதிக்குதான். இரு நாடுகளுக்கும் இடையே அமைதி, ஒற்றுமையை ஏற்படுத்துவதுதான் எங்களது தலையாய கடமையாக உள்ளது. கடந்த காலத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளை போல் அல்லாமல் இரு தரப்பிலும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையை நடத்தும் பணிகளில் எதிர்காலத்தில் இருநாடுகளும் ஈடுபட வேண்டும்.