உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் உடலுக்கு அரசு மரியாதை: ஒரிசா முதல்வர் அறிவிப்பு..!

Siva

வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (08:39 IST)
உடல் உறுப்பு தானம் வழங்குவோருக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்த நிலையில் தற்போது ஒரிசா முதல்வரும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
உடல் உறுப்பு தானம் என்பது மிகவும் அவசியம் என்றும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் கூறிவரும் நிலையில் சமீபத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி சடங்குகள் அரசு மரியாதை உடன் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். 
 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் இதை அறிவித்த பின்னர் பல உடல் உறுப்பு தானம் வழங்கியவரின் உடல்கள் அரசு மரியாதை உடன் இறுதி மரியாதை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழக முதல்வரின் அறிவிப்பை அடுத்து ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒரிசாவில் உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் இறுதி சடங்குகள் முழு அரசு மரியாதை உடன் மேற்கொள்ளப்படும் என அவர் அறிவித்துள்ளதற்கு ஒரிசா மாநிலத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்