இந்தியாவில் முப்படைகளிலும் பல்வேறு உள் பிரிவுகள் உள்ளன. ஒரு படையின் பிரிவில் உள்ள பதவி, மற்றொரு படையின் அதே பிரிவில் சம அளவிலான பதவியாகக் கருதப்பட இத்திட்டம் வழி செய்கிறது. அதேபோல், அதிகாரிகளின் ஓய்வுக்குப் பின்னர் எந்தப் படையைச் சேர்ந்தவர் என்றில்லாமல் அனைத்துப் படைப் பிரிவினருக்கும் வேறுபாடின்றி சம விகித ஓய்வூதியம் வழங்கப்படும்.