அவ்விழாவில், மாநில சிறப்பு விருந்தினராக அமைச்சர் பிக்ராம் சிங் மஜிதிஹா கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். அப்போது, அவர் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றியுள்ளார். முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட இவ்விழாவில், தேசியக்கொடி தலைகீழாக பறந்ததை கவனிக்காமல் இருந்துள்ளனர்.
பின்னர் சுமார் 1 மணி நேரத்துக்குப்பின், இந்த தவறை அதிகாரிகள் கண்டுபிடித்து சரி செய்தனர். இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மந்திரி பிக்ராம் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும் நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.