அரியானா மாநிலம் சிர்சா நகரில் இருந்து நாகலாந்து மாநிலம் திமாப்பூருக்கு நேற்று காலை ஒரு தனியார் விமானம், நிறைய பெட்டிகளுடன் சென்றது. நாகலாந்து செல்லும் விமானத்தில் கோடி கணக்கில் பணம் கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு தகவல் சென்றது.
பழைய ரூபாய் நோட்டுகள் ரூ3.5 கோடி மதிப்பில் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. இந்த பணம் தொழில் அதிபர் அமர்ஜித்குமார்சிங்குக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. வருமான வரித்துறையினர் அமர்ஜித்குமார்சிங்கிடம் விசாரணை செய்ததில், இந்த பணம் டெல்லியில் உள்ள பிரபல அரசியல்வாதிக்கு சொந்தமானது என்று கூறியுள்ளார்.