ஒடிசா மாநிலம், பாலாசூர் மாவட்டம், புடகுந்தா என்ற பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் மாசேன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) பயிற்சி திட்டம் ஒன்றில் கலந்து கொள்ள அருகில் உள்ள ஊருக்கு சென்றார்.
அப்போது, தான் பணிபுரியும் பள்ளியின் ஆசிரியர் ஒருவரை தொடர்பு கொண்டு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
எனவே, அவரது மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடத்தி பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, அந்த பள்ளிக் கூடத்தில், வாஜ்பாய் -குஇரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு, வாஜ்பாய் பற்றி தலைமை ஆசிரியர் தெரிவித்த தகவல் தவறானது என்று தெரியவந்தது.