இவர்களின் காதலுக்கு இரு தரப்பை சேர்ந்த உறவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடந்த மாதம் 13ஆம் தேதி பணிக்குச் சென்ற ஜெபமாலை மேரி, மாலை வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. அதே வேளை ஜேசுதாசும் காணாமல் போயிருந்தார்.
அப்போது ஜெபமாலை மேரியின் பெற்றோர் தங்களுடன் வந்துவிடும்படி கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள். ஆனால், ஜெபமாலை மேரி, தனது காதல் கணவருடன் செல்வதாக உறுதியாக கூறிவிட்டார். இதையடுத்து காவல் துறையினர் ஜெபமாலை மேரியை ஜேசுதாசுடன் அனுப்பி வைத்தனர்.