புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தனித்துப் போட்டி

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (01:10 IST)
புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
 

 
புதுச்சேரி மாநிலத்தில் 2011 ஆம் ஆண்டு என். ஆர். காங்கிரஸ் கட்சியை ரங்கசாமி தொடங்கினார். கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 17 தொகுதிகளில் போட்டியிட்டு 15 தொகுதியில் வெற்றி பெற்றார். புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்தார்.
 
இந்த தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 16 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வரும் சட்ட சபை தேர்தலில் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 
அடுத்த கட்டுரையில்