மனித உயிரை விட எதுவும் பெரிதல்ல. விவசாயிகள் தற்கொலை என்பது பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்சனை இதற்கு தீர்வு காண அரசு முயன்று வருகிறது. உங்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் ஏற்க அரசு தயாராக உள்ளது. நாட்டின் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாங்கள் விவசாயிகளை உயிரிழக்க விடமாட்டோம்” இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விவசாயிகளுக்கு ஆதரவாக அரசு துணை நிற்கும் என்றும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்” என்றார்.