மேலும், ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின், பிரிட்ஜ், வீட்டுக்கு ஒரு இளைஞருக்கு அரசு வேலை, முதியோர் உதவித் தொகை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதிகளை அள்ளி வழங்கினர். ஆனால், ரெங்கசாமி அரசு அமைந்து 4 வருடங்கள் ஆன போதும், தேர்தல் அறிக்கையில் கூறியதை எதையும் செய்யவில்லை.
தற்போதுதான், புதுவையில் இலவச மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை முதல்வர் வழங்கி வருகிறார். ஆனால், தேர்தலின் போது கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது போன்று புதுவை ரெங்கசாமி அரசு பம்மாத்து காட்டி வருகிறது. அது இனி மக்களிடம் எடுபடாது என தெரிவித்துள்ளார்.