பாஜக ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது : சவால் விடும் தமிழிசை சவுந்தரராஜன்

செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (09:47 IST)
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், பாஜக ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.


 
 
பாஜக சார்பாக, சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் தமிழிசை கலந்து கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களிடம் பேசினார்.  அவர் கூறும் போது “ வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தமிழகத்தை சுத்தம் செய்ய வந்த கட்சி பாஜக. சுஷ்மசுவராஜ் இலங்கை சென்றதை பயண நாடகம் என்று வைகோ கூறியுள்ளார். 
 
எப்போதும் நாடகம் நடத்தி கொண்டிருக்கும் வைகோவுக்கு எல்லாமும் நாடகமாகத்தான் தெரியும். அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை” என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்