பாஜக சார்பாக, சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் தமிழிசை கலந்து கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களிடம் பேசினார். அவர் கூறும் போது “ வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தமிழகத்தை சுத்தம் செய்ய வந்த கட்சி பாஜக. சுஷ்மசுவராஜ் இலங்கை சென்றதை பயண நாடகம் என்று வைகோ கூறியுள்ளார்.