ரூ.200 கோடி பணப் பரிவர்த்தனை நடந்தபோது, கலைஞர் டி.வி.க்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை இன்று (26 ஆம் தேதி) நடந்தது. அப்போது, கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணப் பரிவர்த்தனையில் கூறப்படும் குற்றச்சாற்றுக்கு ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர்.