ஆனால் ஆன்மிக நகரமான வாரணாசியில் செக்ஸ் புகாரில் சிக்கி சர்ச்சைக்குரிய நித்யானந்தாவுக்கு மிகவும் ஆடம்பரமாக பிளக்ஸ்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது பக்தர்கள் மனதை புண்படுத்தியது. பொதுமக்கள் மத்தியிலும், யாத்ரீகர்கள் மத்தியிலும் மிகுந்த முகச்சுளிப்பை ஏற்படுத்துவதாக காணப்பட்டது.
மேலும், மகளிர் அமைப்பினர், பனாரஸ் பல்கலை கழக மாணவர் சங்கத்தினரைச் சேர்ந்தவர்கள் ‘புனித வாரணாசியை விட்டு நித்யானந்தாவே வெளியேறு’ என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைகளில் வைக்கப்பட்டிருந்த நித்தியானந்தாவின் பிளக்ஸ் பேனர்களை அடித்து நொறுக்கியும், அவரது படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.