NSDL அதிகாரிக்கு வாட்டர் பாட்டில் கொண்டு வந்து கொடுத்த நிர்மலா சீதாராமன்!

திங்கள், 9 மே 2022 (09:29 IST)
NSDL அதிகாரிக்கு வாட்டர் பாட்டில் கொண்டு வந்து கொடுத்த நிர்மலா சீதாராமன்!
NSDL  அதிகாரி மேடையில் பேசிக் கொண்டிருந்த போது வாட்டர் பாட்டில் கொண்டு வந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
நேற்று டெல்லியில் NSDL ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதில் NSDL மேனேஜிங் டைரக்டர் பத்மஜா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஓட்டல் ஊழியரிடம் தண்ணீர் பாட்டில் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்
 
இதனை அடுத்து தனக்காக கொடுக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலை உடனடியாக எடுத்துக்கொண்டு மேடை ஏறிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருக்கு தண்ணீர் பாட்டிலை திறந்து கொடுத்தார்
 
இதனால் ஆச்சரியம் அடைந்த NSDL மேனேஜிங் டைரக்டர் பத்மஜா அவருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்