தேசிய கீதமும், தேசியக்கொடியும் அவமதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மதிப்பு காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பல்வேறு தருணங்களில் இந்திய தேசிய கீதம் பாடப்படுகிறது.
தேசிய கீதத்தின் சரியான வடிவம் பற்றியும், அதை எப்போதெல்லாம் பாட வேண்டும் என்பது குறித்தும், அதற்கு மரியாதை தரவேண்டியதின் அவசியம் பற்றியும் அவ்வப்போது வழிமுறைகள் வழங்கப்பட்டு வந்துள்ளன.