பாஜகவின் இந்துத்துவக் கொள்கையால் இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் கவலை அடைந்துள்ளது உண்மையே. மத ரீதியான வன்முறை, மத அடிப்படைவாதம் ஆகியவை தொடர்பாக தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் புறந்தள்ளி, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கக்கூடிய நிலையை மோடி அடைந்துள்ளார்.
1984 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி தலைமையில் அமைந்த ஆட்சிக்குப் பின்பு, இந்தியாவில் இப்போதுதான் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமையவுள்ளது" என்று நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் முன்வைத்து டெய்லி டைம்ஸில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.