இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்திய-சீன எல்லையில் அமைதியை பராமரிப்பது அவசியமானது என்று குறிப்பிட்டார். மேலும் இரு நாட்டு உறவில் நம்பிக்கை ஏற்படுவது அவசியம் என்றும் தெரிவித்தார். இரு தரப்பு உறவும் நம்பிக்கை அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்றும் மோடி பேசினார்.
இந்திய தொழில்துறையில் சீனாவின் முதலீட்டை வரவேற்பதாக மோடி தெரிவித்துள்ளார். இருநாட்டு பொருளாதார உறவை மேலும் மேம்படுத்த முடியும் என கருதுவதாக கூறிய மோடி, சீனாவுடனான உறவுக்கு தாம் பெரும் முக்கியத்துவம் அளிப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் இரு தொழில் பூங்காக்களில் சீனா முதலீடு செய்ய உள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.