ஏழைகளுக்காகத் தான் அரசு இருக்க வேண்டுமே தவிர, படித்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் அல்ல. மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம். நிலையான அரசு, நல்ல நிர்வாகம், வளர்ச்சி என்பதே எங்கள் அரசின் நோக்கம். ஏழைகளின் குரலுக்கு செவிசாய்க்கும் அரசாக மத்திய அரசு செயல்படும். குஜராத்தில் 24 மணி நேர மின்சாரம் வழங்குவது பற்றி வாக்குறுதி தந்தபோது பலர் சந்தேகப்பட்டனர். தற்போது அனைத்து கிராமங்களிலும் 24 மணி நேரம் மின்சாரம் உள்ளது.
கிராமங்களில் விவசாயத்திலும் மாற்றங்களை ஏற்படுத்த உறுதி பூண்டுள்ளோம். அனைவருக்கும் கல்வியும், தொலைத் தொடர்பு வசதியும் கிடைத்தால் புதிய பாரதம் உருவாகும். மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக உள்ள இந்தியா புதிய உச்சத்தை அடைய வேண்டும். கிராமங்கள் வளர்ச்சியடைந்தால் இளைஞர்கள் கிராமங்களைவிட்டு வெளியேற மாட்டார்கள். கிராமங்கள் வளர்ச்சியடைந்தால்தான் நாடு முன்னேறும். நாட்டில் எந்த ஏழையும் பசியால் வாடக்கூடாது.