ஆகஸ்ட் 7ஆம் தேதி, சென்னையில், தேசிய கைத்தறி நாள் விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகைதர உள்ளார்.
இந்த விழாவில், பிரதமர் நேரந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். மேலும், சிறந்த நெசவாளர்ளுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
பிரதமர் ஆன பின்பு, நரேந்திர மோடி முதன்முதலாகத் தமிழகம் வருகிறார் என்பதால், அவருக்கு மிகச் சிறப்பாக வரவேற்பு கொடுக்க வேண்டும் என பாஜக முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.