அசோக் சிங்கால் உடலுக்கு நரேந்திர மோடி இறுதி மரியாதை

வியாழன், 19 நவம்பர் 2015 (00:22 IST)
விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் உடலுக்கு பிரதமர் மோடி இறுதி மரியாதை செலுத்தினர்.


 

விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்காலுக்கு, கடந்த 14ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அசோக் சிங்கால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் மரியாதை செய்தார். அதுபோலவே, மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்யவர்தன் ரத்தோர் உள்ளிட்டவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.  

வெப்துனியாவைப் படிக்கவும்