முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உடல், டில்லியிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த போது. ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், கவர்னர் ரோசைய்யா தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் அவரது உடலை பெற்றுக் கொண்டனர்.
அதற்கு முன்னதாக, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறுகையில், முன்னாள் குடியரசு தலைவர் கலாமின் இறுதிச் சடங்குகள், முழு அரசு மரியாதையுடன் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. அப்துல் கலாமின் கனவு திட்டமான விஷன் 20 நிறைவேற்றுவோம் என்றார்.
பின்பு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மேகாலயா கவர்னர் சண்முகநாதன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்றார்.