ஸ்ரீபெரும்புதூருக்கு பிரச்சாரம் செய்ய வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட பலர் மீது குற்றம்சாற்றப்பட்டு நளினிக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்பு ஆயுள் தண்டனையாக அது மாற்றப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் ஆயுள் தண்டனை கைதிகள் நீண்ட காலம் சிறையில் இருப்பதாலும், வழக்கு தாமதம் ஏற்பட்டதாலும் அவர்களை அரசு விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒரு வழக்கில் தீர்ப்பு கூறினார்கள்.