இவ்விபத்தில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைவாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் ரயில் பெட்டிகளில் சிக்கியிருந்தவர்களை கிராம மக்களின் உதவியோடு மீட்டனர்.
இவ்விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுமென தெரிவித்த ரயில்வே அமைச்சர் மலிகார்ஜுன் கார்கே விபத்தில் பலியானவர்களுக்கு ரூ. 2 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 மற்றும் சிறிய காயமடைந்தவர்களுக்கு ரூ. 10,000 நிவாரண நிதி அளிக்கப்படுமென தெரிவித்துள்ளார்.