மாணவியை கும்பலாக கற்பழித்த மாணவர்கள் : வாட்ஸ்-அப்பில் பரவியதால் பரபரப்பு

வெள்ளி, 27 நவம்பர் 2015 (17:54 IST)
பதினைந்து வயது பள்ளி மாணவியை நான்கு மாணவர்கள் சேர்ந்து கும்பலாக கற்பழித்து, அதை வாட்ஸ்-அப்பிலும் பரப்பிய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மும்பையில் வசிக்கு ஒரு பள்ளி மாணவியை, அவருடன் படிக்கும் சக மாணவர்கள் படிப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, ஒரு மாணவரின் வீட்டிற்கு வர வைத்துள்ளனர்.
 
அந்த சிறுமி அங்கு சென்ற போது, அந்த வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை. அந்த பெண்ணை வரவழைத்த மாணவனின் நண்பர்கள் மூன்று பேர் இருந்துள்ளன. இவர்களும் இந்த சிறுமிக்கு அறிமுகமானவர்கள்தான்.  
 
அதன்பின், அந்த நான்கு பேரும், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதை மொபைலில் வீடியோவாகவும் எடுத்துள்ளனர். யாரிடமாவது கூறினால், அந்த வீடியோவை இணைய தளங்களில் போட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
 
அதனால் பயந்த அந்த சிறுமி,  தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில், அவர்கள் எடுத்த வீடியோ, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஒரு மாணவன் தனது நண்பனுக்கு அனுப்பியுள்ளான். அப்படியே அந்த வீடியோ வாட்ஸ் அப் மூலம் மும்பை முழுவதும் பரப்பியுள்ளது.
 
கடைசியில் அந்த வீடியோ, பாதிக்கப்பட்ட பெண்ணுடைய அத்தையின் செல்போனுக்கே வாட்ஸ் அப் மூலம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்த சிறுமியிடம் விசாரித்த போது, அந்த சிறுமி அங்கு நடந்த விவரங்களை அவரிடம் கூறியுள்ளார்.
 
உடனே, அந்த சிறுமியின் அத்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் சம்பந்தப்பட்ட அந்த நான்கு மாணவர்களையும் கைது  செய்த போலிஸ்,அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது. 
 
அந்த மாணவர்கள், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்