தொலைக்காட்சி நடிகை மற்றும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமாகிய டாலி பிந்தர மும்பை போரிவலி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தொல்லை, மிரட்டல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலுணர்வை தூண்டுதல் போன்ற குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
ராதே மா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக இதுவரை 12 க்கும் அதிகமாக எப்.ஐ.ஆர் கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு டாலி பிந்த்ர ராதே மா தன்னிடமும் தனது குடும்பத்தினரிடமும் அநாகரிகமாக நடந்து கொள்கிறார் என குற்றம் சாட்டியிருந்தார். மேலும் ஆண் பக்த்தர்களிடம் நெருக்கமாக இருக்க தன்னை வற்புறுத்தினார் எனவும் டாலி பிந்த்ரா கூறினார்.
டாலி பிந்த்ராவின் புகாரின் அடிப்படையில் ராதே மா, சஞ்ஜீவ் குப்தா, தல்லி பாபா, புபேந்த்ர மற்றும் பலர் மீது குற்ற பிரிவு 294, 354, 506(2), 109 12 B ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை கூடுதல் கமிஷ்னர் ஃபதே சிங் பாட்டீல் கூறினார்.