மீண்டும் சுனாமி? பீதியில் மும்பை நகர மக்கள்!!

செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (16:10 IST)
மும்பையில் இன்று கனமழை காரணமாக சுனாமி போன்ற பெரிய அலைகள் தாக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


 
 
மும்பையில் கனமழை பெய்து வருவதால், சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மும்பையில் உள்ள 7 ஏரிகளும் முழுவதுமாய் நிரம்பியுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு மும்பையை சுனாமி போன்ற பேரலை தாக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
நேற்று 3.50 மீட்டர் உயரத்திற்கு கடலில் அலைகள் எழுந்தது. இன்று இதைவிட பெரிய அலைகள் எழும்பி கரையை தாண்டி வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்