இந்த சேவையில் பயணிகள் 1800 212 4502 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால், இரண்டு ரிங்களில் அது தானாகவே அழைப்பினை துண்டித்த பின்னர், சில வினாடிகளில் செல்போனிற்கு மும்பை புறநகர் ரயில்களின் தற்போதைய போக்குவரத்து நிலவரத்தை பற்றிய தகவல்கள் எஸ்.எம்.எஸ்- ஆக வரும்.
முதற்கட்டமாக, இந்த வசதியை ஒரு தனியார் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்துவதாக மேற்கு ரயில்வேயின், தலைமை பி.ஆர்.ஒ ரவீந்திர பாஸ்கர் தெரிவித்தார். மேலும் இந்த வசதியினை எந்த வகை செல்போன்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.