டெல்லியில் 4 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

ஞாயிறு, 19 ஜூலை 2015 (02:19 IST)
டெல்லியில் மிக முக்கியமான பகுதியில் 4 மாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக பலியானார்கள். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
 

 
டெல்லி மேற்கு பகுதியில் விஷ்ணு கார்டன் உள்ளது. இங்குள்ள 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்தத் தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் 8 வாகங்களில் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
 
மேலும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும், உள்ளூர் காவல்துறையினரும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, இந்த சம்பவத்தில் பலியான 3 பேரின் உடலை கைப்பற்றினர். மேலும், படுகாயமடைந்த 9 பேரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்