மத்தியபிரதேசத்தில் ரயில் விபத்து: 27 பேர் பலி (படங்களுடன்)

புதன், 5 ஆகஸ்ட் 2015 (10:56 IST)
மத்தியபிரதேச மாநிலத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 27 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மத்தியபிரதேசத்தில் ஆற்று பாலத்தை கடக்க முயன்ற போது காம்யானி எக்ஸ்பிரஸ் மற்றும் ஜனதா எக்ஸ்பிரஸ் என்ற ரயில்கள் தடம் புரண்டதால் இதில் பயணித்த 27 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்த ரயில் பெட்டிகள் ஆற்றில் விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் மீட்பு பணிகளுக்கான ஏற்பாடுகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. 





 


  
 

வெப்துனியாவைப் படிக்கவும்