இரு குழந்தைகளுக்கு தீ வைத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்

செவ்வாய், 5 ஜனவரி 2016 (16:21 IST)
தன் இரு குழந்தைகளுக்கும் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துவிட்டு, ஒரு தாய் தானும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அரியானாவில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
அரியானாவில் உள்ள அம்பாலா மாவட்டத்தில் உள்ள டேரா சலிம்பூர் எனும் கிராமத்தில் வசிப்பவர் ராம்சிங். இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரின் மனைவி சீமாராணி. இவர்களுக்கு ஹர்மான்(4) என்ற ஆண் குழந்தையும்,  ஹேமன் பரி என்ற ஒரு வயது பெண் குழந்தையும் இருக்கிறது.  கணவன் மனவிக்குள் எழுந்த ஒரு பிரச்சனை காரணமாக சீமா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
 
இதனால், சம்பவத்தன்று, தனது இரண்டு குழந்தைகள் மீதும் மண்ணெண்ணையை ஊற்றி தீயை பற்ற வைத்தார் சீமா. அதில் அவர்கள் இருவரும் கதறி துடித்த வேளையில், தனது உடலில் சீமா தீமூட்டிக் கொண்டார். இதில் அவர்கள் மூவரும் அந்த இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.
 
அவர்களின் பிரேதங்களை கைப்பற்றிய காவல்துறை அதிகாரிகள், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்