மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் உள்ள மாம்பழத் தோட்டத்தில், பிளாஸ்டிக் பைகளில் கட்டியபடி கிடந்த அரை டஜனுக்கு மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். பின்னர் அந்த வெடிகுண்டுகளை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர்.
இது குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், "நாங்கள் 30 நாட்டு வெடிக்குண்டுகளை கைப்பற்றியுள்ளோம். அந்த வெடிகளைச் செயலிழக்க செய்துவிட்டோம். மேலும் மாம்பழத் தோட்டத்தின் சொந்தக்காரரை தேடிவருகிறோம்" என்று கூறினார்.
ஏற்கனவே கடந்த புதன் அன்று மால்டாவை அடுத்துள்ள ஹடிசபா கிராமத்தில் இதே போன்று வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களில் அநேக இடங்களில் இருந்து, பல வெடிகுண்டுகளை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.