இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜுலை 21ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது.
மேலும், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி விவகாரம், மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா ராஜினாமா விவகாரம், மத்திய மனித வளதுறை மந்திரி ஸ்மிரிதி இரானி கல்வி சான்றிதழ் விவகாரம் போன்றவற்றை பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்ப தயராகி வருகிறது என கூறப்படுகின்றது.