இச்சம்பவம் தொடர்பாக நசிராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்த ஊர்மிளா, அந்த குரங்கின் மீது வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுத்து, பறிபோன தங்கச் சங்கிலியை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
செயின் பறிப்பு தொடர்பாக பிரபல ரவுடிகள் மீது அளிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை கண்டுபிடித்து, நகைகளை பறிமுதல் செய்வதே பெரும்பாடாக உள்ள நிலையில், குரங்கின் மீது எந்த சட்டத்தின்கீழ் வழக்கு தொடர்வது? அந்த ‘செயின் ஸ்னாட்சிங் குரங்கை’ எந்த மரத்தின் மீது ஏறி கைது செய்வது? என்று நசிராபாத் காவல்துறையினர் குழம்பிப்போய் உள்ளனர்.