சுதந்திர தின விழாவின் போது பிரதமர் ஆற்றிய உரையில் பிரதம மந்திரி வறியோருக்கும் வளம் திட்டம் (பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா) விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்ததை இன்று மீண்டும் உங்களுக்கு மின் அஞ்சல் மூலம் நினைவுபடுத்துகிறேன். நிதி சார்ந்த தேசிய அளவிலான இந்த இயக்கத்தை நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வங்கி வசதியும் வங்கிக் கணக்கும் இருக்க வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு வைத்துள்ள அனைவருக்கும் ரூபே பற்று வரவு அட்டை (டெபிட் கார்டு) மற்றும் ரூபாய் ஒரு லட்சம் வரை விபத்துக் காப்பீடும் வழங்கப்படும்.
"நமது மேம்பாட்டுக்கு ஒன்றுபடுவோம் வளர்ச்சி அடைவோம்" என்ற தத்துவத்தின் அடிப்படையில் வறியோருக்கும் வளம் திட்டம் (ஜன் தன் யோஜனா) சேர்க்கப்பட்டுள்ளது. "இந்தக் குறிப்பிடத்தக்க தேசிய அளவிலான முயற்சியில் நீங்கள் அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். உங்களுக்கு எப்போதும் நான் ஆதரவாக இருப்பேன்" என்று பிரதமர் நரேந்திர மோடி தனது மின்னஞ்சல் செய்தியில் தெரிவித்துள்ளார்.