முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடல் கவுகாத்தியிலிருந்து ராணுவ விமானம் மூலம் தில்லி வந்தடைந்தது. பாலம் விமான நிலையத்தில் ராணுவ மரியாதையுடன் அப்துல் கலாம் உடலை முப்படையினர் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து அவரது உடலுக்கு முப்படை தளபதிகள் அஞ்சலி செலுத்தினர்.