நான் தேசத்துக்கு உள்ள அச்சுறுத்தலை போக்க நினைக்கிறேன். ஆனால் காங்கிரஸ் கட்சி என்னை அகற்றுவதில் மட்டுமே குறியாக இருக்கிறது. குஜராத் மக்களுக்கு நன்மை செய்துள்ளது போல் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்காகவே தேர்தலில் வாக்களித்துள்ளேன். இதுவரை எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. இனியும் என்னை ஆதரிப்பீர்கள் என நம்புகிறேன். தேர்தலில் இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்க வேண்டும்.வாக்காளர்கள் வாக்களிக்கும் போது, நிர்பயா சம்பவம், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் போன்றவற்றை பற்றி சிந்திக்க வேண்டுமென மோடி பேசினார்.