இந்தநிலையில் அங்குள்ள கால்வாய் ஒன்றில் காணாமல் போன மாணவியின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனையின் இறுதியில் கடத்தப்பட்ட மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதும், பின்னர் கூர்மையான ஆயுதங்களால் அவள் கொலை செய்யப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டது. பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.