13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: தண்டவாளத்தில் வீசிய கொடூரர்கள்

வியாழன், 26 மே 2016 (12:28 IST)
நாட்டின் தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதே போல் ஒரு சம்பவம் மீண்டும் டெல்லியில் நடந்துள்ளது.


 
 
13 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசிய சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ரயிலில் இருந்து சிறுமி வீசப்பட்ட சம்பவம் டெல்லியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 17-ஆம் தேதி காணாமல் போன அந்த சிறுமி உடலில் பலத்த காயங்களுடன் புல் பிரகலாத்பூர் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த சிறுமி பல நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்துளது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மனநிலை பாதிகப்பட்டவர் என கூறப்படுகிறது.
 
பதிக்கப்பட்ட அந்த சிறுமி சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றத்தில் ஈடுபட்டவர்களை விரைவில் கண்டுபிடித்து தண்டனை வழங்க காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்