உத்திரப்பிரதேசத்தில் தலித் குழந்தைகள் கொலை செய்யப்பட்டது குறித்து வி.கே.சிங்கின் விமர்சனம் சர்சைக்குள்ளாகிய நிலையில், பா.ஜ.க. தலைவர்கள் எச்சரிக்கையுடன் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார்.
இவ்விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வி.கே. சிங், நாயின் மீது யாரேனும் கல்லெறிந்தால், அதற்கும் மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டுமா? என பதில் அளித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நாம் கூறும் கருத்துக்கள் தவறாக சித்தரிக்கப்படும் போது அதில் இருந்து நாம் விலகியிருக்க முடியாது. எனவே எச்சரிக்கையுடன் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்". இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.